ட்வின் டவர் இடிக்கப்பட்ட நேரத்தில் பிரபலமான ஒரு ஜோக் இது.
ஒரு நாய் படு வேகமாக ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு வந்தது.அது கடித்து விடும் நிலையில் அந்த நொடி ஒரு மனிதன் சடாரென உள்ளே புகுந்து நாயை வேகமாக ஒரு உதை விட்டு அந்த பெண்ணை காப்பாற்றினான்.
அதை ஒரு பத்திரிக்கை நிருபர் லைவ்வாக பார்த்து கேமராவில் பதிவு செய்து கொண்டார்.அந்த மனிதனை பாராட்டி "கண்டிப்பாக இதை நாளை பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன் தலைப்பு செய்தியே இது தான்,'லோக்கல் ஹீரோ வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்.'"
அந்த மனிதன்,"நன்றி, ஆனால் நான் உள்ளூர் இல்லை" என்றான்.உடனே நிருபர்,"ஓ அப்படியா, சரி இந்த செய்தி எப்படி? 'அமெரிக்கர் வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்'"
திரும்பவும் அவன்,"இல்லை நான் அமெரிக்கனில்லை, பாகிஸ்தானி"
மறு நாள் வந்த தலைப்புச் செய்தி,
"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"
Categories: real-life,superb
I read this before!
பதிலளிநீக்குExposing American and some "friend's" mentality!!
May be and I had a guess many read this before,but its a nice joke and i wanted to share for unread users.
பதிலளிநீக்குIt shows how they (americans) fear and disgust...and just thats all...LoL
But still they support Pakistan than India.
பதிலளிநீக்கு